ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர்... போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது!
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் அடுத்த வருடம் (2025) பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தொடர் ஹைபிரிட் மொடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும், இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும், துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
பி பிரிவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
இந்த தொடரில் இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.
இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அட்டவணை விவரம்,
பெப்ரவரி 19, பாகிஸ்தான் vs நியூசிலாந்து
பெப்ரவரி 20, பங்களாதேஷ் vs இந்தியா
பெப்ரவரி 21, ஆப்கானிஸ்தான் vs தென்னாபிரிக்கா
பெப்ரவரி 22, அவுஸ்திரேலியா vs இங்கிலாந்து
பெப்ரவரி 23, பாகிஸ்தான் vs இந்தியா
பெப்ரவரி 24, பங்களாதேஷ் vs நியூசிலாந்து
25பெப்ரவரி அவுஸ்திரேலியா vs தென்னாபிரிக்கா பெப்ரவரி
26, ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
பெப்ரவரி 27, பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
பெப்ரவரி 28, ஆப்கானிஸ்தான் vs அவுஸ்திரேலியா
மார்ச் 1, தென்னாபிரிக்கா vs இங்கிலாந்து
மார்ச் 2, நியூசிலாந்து vs இந்தியா
மார்ச் 4, அரையிறுதி (A1 vs B2)
மார்ச் 5, அரையிறுதி (B1 vs A2)
மார்ச் 9, இறுதிப் போட்டி நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.