மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்; வர்த்தக நிலையங்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து மனித பாவனக்கு உதவாத 100 கிலோகிராம் உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
இந்த தேடுதல் நடவடிக்கையில், மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட நகரிலுள்ள பேக்கரிகள், சில்லறைக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மரக்கறிக் கடைகள் உட்பட 16 கடைகளில் தேடுதல் நடத்தியபோதே, 4 வர்த்தகர்கள் சிக்கியதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
