ஹொரணையில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
களுத்துறை - ஹொரணையில் உள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (05-05-2024) முற்பகல் ஹொரணை - கிரேஸ்லேன்வத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 35 வயதுடையவர் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.