அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து!
விவசாய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 6 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
யூரியா உரத்தை வினைத்திறனாக விநியோகிக்க வசதியாக இந்த நடவடிக்கை , விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படிஇ நாட்டிற்கு வரும் 65, 000 மெற்றிக் தொன் யூரியாவை எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கமநல நிலையங்களுக்கு கொண்டு சென்று, இறுதியில் விவசாயிகளிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக விவசாய அமைச்சு, கமநல சேவைகள் திணைக்களம், தேசிய உர செயலகம், இலங்கை உர நிறுவனம் மற்றும் வர்த்தக உர நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்களின் விடுமுறைகள் இக்காலப்பகுதியில் இரத்து செய்யப்படவுள்ளன.