மகிந்தவின் கட்சி அலுவலகத்திற்கு தீவிர பாதுகாப்பு : திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்
பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தை சூழவுள்ள பகுதியில் திடீரென பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையைில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
30 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற கட்சி மாநாட்டின் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய நிறைவேற்றுச் சபை கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் புதிய தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்மொழியப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்தப் பதவியை மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.