நுவரெலியாவில் கடுமையான பனி புகை மூட்டம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான பனி புகை மூட்டம் நிலவுவதால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை இன்றையதினம் (16-02-2024) நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2 தினங்களாக மாலை வேளையில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று (16) மாலை 4 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
அதே சமயம் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளது.
அவ் வீதியில் மிக அவமனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.