கொவிட் -19 வைரஸின் நிலை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கொவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாடு உலகளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
SARS-CoV-2 வைரஸ் பரவும்போது சில மரபணு மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பான நிலை என்றும், தற்போது உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ள வகை, 2024 ஆம் ஆண்டில் பதிவான மரபணு வகையின் துணை வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டில் இந்த வகை கவனிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.