வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை
சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் தூக்கமின்மை, நீடித்த மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உணர்ச்சிபூர்வ அதிர்ச்சியான மனநிலைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக மனநல ஆலோசகர் வைத்தியர் விந்தியா விஜயபண்டார தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில், பேரிடரின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடுகள் போன்ற நிலைமைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு மனநலக் குழுக்களை அனுப்பி உளவியல் ஆதரவு மற்றும் ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது. பேரிடர் நிவாரணத்தின் அடுத்தகட்டம் உணவு மற்றும் தங்குமிடத்துக்கப்பால் செல்ல வேண்டும்.
இது உயிர் பிழைத்தவர்களுக்கு நீண்டகால மனநல சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நீண்டகால உளவியல் சிக்கல்களைத் தடுக்க நிவாரண நிலையங்களுக்குள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் தொடர்ச்சியான பின்தொடர்தல் பராமரிப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.