நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பரிதாமாக பிரிந்த இரு உயிர்கள்
அரலகங்வில – தெஹியத்தகண்டிய பிரதான வீதியில் அரலகங்வில பகுதியில் இன்று (18) இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
வேஹேரகலயில் இருந்து அரலங்வில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கில் எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

பெண் வைத்தியசாலையில்...
விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 21 மற்றும் 55 வயதுடைய ருஹூனுகம மற்றும் அரலகங்வில ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
இதேவேளை காயமடைந்த பெண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.