சப்புகஸ்கந்தையில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஆபத்தான பொருட்கள் மீட்பு
சப்புகஸ்கந்தைப் பகுதியில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின், ஐஸ், கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக களனி பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
அவற்றில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், 515 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 565 கிராம் கொக்கைன் ஆகியன அடங்குவதாக பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
துபாயில் உள்ள இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த சந்தேக நபருக்கு இந்தப் போதைப்பொருட்கள் வழங்கப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களனி பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.