அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! சுற்றறிக்கை வெளியீடு
தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்கள், நாளைய தினம் (09-05-2023) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கை இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (08-05-2023) வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாம் தேர்தலில் போட்டியிடும் எல்லைக்கு வெளியே பணி புரியும் அரச உத்தியோகத்தர்களுக்கு, இதற்கு முன்னரே பணிக்கு சமூகமளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் சபை தேர்தலில் போட்டியிடும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், நிறுவனத் தலைவரின் அறிவுரையின் பேரில் அருகிலுள்ள தேர்தல் எல்லைப் பகுதியில் பணி புரிவதற்கான வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் தெரிவித்துள்ளார்.