இலங்கையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம்! வெளியான அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் (08-05-2024) முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலு, மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.