முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைக்கு அழைப்பு; கிலியில் பலர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, அவருக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்க்ஷவின் நெருங்கிய சகா கைது
அதேவேளை கோட்டாபய ராஜபக்க்ஷவின் நெருங்கிய சகா ஒருவரும் இவ்விடயம் தொடர்பாக கைதாகியுள்ளதால்,இந்த விசாரணை பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதிகாரத்தை பயன்படுத்திச் சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கீடு செய்த விவகாரமே விசாரணைக்கு வழிகோலியுள்ளது. இந்நிலையில்,நாளை வௌ்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைக்கு முன்னிலையாகவுள்ளார்.
இந்நிலையில் கோட்டபாய விசாரணைக்கு அழைக்கப்படும் விடயம் ராஜபக்க்ஷ ஆரவாளரிடையே கிலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.