இலங்கையில் பயங்கரம்...துப்பாக்கி சூட்டில் சிறுமி பலி; விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் ஹெட்டிபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகுலகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக துப்பாக்கி சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்த 12- துப்பாக்கி, துப்பாக்கிக்கான 2025 உரிமம் மற்றும் இரண்டு வெற்று வெடிமருந்து குவளை போன்றவற்றை பொலிஸார மீட்டுள்ளனர்.
ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.