தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி ; யாழ் தேவி சேவை வழமைக்கு
புனரமைப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தற்போது முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான 'யாழ் தேவி' தொடருந்து சேவை நாளை (புதன்கிழமை) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறுமார்க்கமாக, காங்கேசன்துறையிலிருந்து காலை 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.