விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
நாட்டில் தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், விலை குறையும் வரை விவசாயிகள் தேவையான யூரியா உரத்தை தாமதமின்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (22-05-2023) முதல் வழங்கப்படும் உர மானியச் சீட்டுக்கள் மூலம் பண்டி உரத்தை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாயிகளிடம் பாடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர Mahinda Amaraweera விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்