இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்க விலை இன்று ரூ.2,000 அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செட்டியார் தெரு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (22) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை மாற்றம், சர்வதேச சந்தையின் நிலை, நாணய மாற்று விகிதங்கள் மற்றும் உள்ளூர் பங்கு தேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்படுகின்றதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்கம் வாங்க நினைப்பவர்களும், முதலீட்டாளர்களும் தற்போதைய விலை நிலவரத்தின்படி சீரான தீர்மானம் எடுக்குமாறு நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
இன்றைய தங்க விலை நிலவரம்
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை: ரூ.271,000
கிராம் ஒன்றின் விலை: ரூ.33,875
22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை: ரூ.250,700
கிராம் ஒன்றின் விலை: ரூ.31,338