விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம் மத்தியவங்கியிடம்!
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று (22) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள்
மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட தங்கப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
10,000 தங்கப் பொருட்களை ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கும், சிஐடிக்கும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
தங்கத்தின் உள்ளடக்கம் மற்றும் எடையை குறிப்பிட்டு, 6,000 பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்தே அவர்கள் இந்தத் தகவலை மேலும் சமர்ப்பித்தனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் உள்ளூர்வாசிகளால் தானாக முன்வந்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதாக முன்னர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மேலும் இந்த விஷயங்களைக் கண்டறிய தொடர்ந்தும்m விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.