இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு இயக்குநர் கௌதமன் இரங்கல்
இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி மனம் வேதனைக்குள்ளாவதாக தமிழக இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கௌதமன் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் வ. கௌதமன், மூத்த பத்திரிகையாளர் ஐயா பாரதி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும் தமிழ்நாடு அம்பத்தூரில் அவரை ஒருமுறை நேரில் சந்தித்து பேசிய நிகழ்வும் இனம் சார்ந்தும் ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்தும் பல முறை பகிரியில் பேசியதும் வந்து வந்து நிழலாடி மனம் வேதனைக்கு உள்ளாகிறது.
ஈழத்தின் பாலும் தமிழினத்தின் பாலும் அடங்காப்பற்று கொண்டு அறத்தோடு இயங்கிய ஐயா பாரதி அவர்களுக்கு மீண்டும் அழியாப் புகழ் வணக்கத்தை என் சார்பிலும் எனது தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.