எரிபொருள் விலையில் திருத்தம்; புதிய விலைகள் இதோ!
நேற்று புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளன.
புதிய விலைகள்
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு்ள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 456 ரூபாவாகும்.
ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 363 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 262 ரூபாவாகும். இதேவேளை, சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 8 ரூபாவால் குறைத்துள்ள நிலையில், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில் அதன்புதிய விலை 360 ரூபாவாகும்.
சுபர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 7 ரூபாவால் குறைத்துள்ள நிலையில், அதன்புதிய விலை 468 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.