ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமோனார் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
பிரான்ஸில் கடந்த இரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இதனால் அந்நாட்டு மக்களை பாரிய அதிர்ச்சியில் உள்ளனர்.
உலகை உலுக்கி தற்போது வருகிற ஓமிக்ரோன் வைரஸ், தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2 இலட்சத்து 8ஆயிரத்து 99 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரான்ஸில் 95 இலட்சத்து 34 ஆயிரத்து 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 23 ஆயிரத்து 372 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு14 இலட்சத்து 28 ஆயிரத்து 388 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,333 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 56,564 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 79 இலட்சத்து 82 ஆயிரத்து 597 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்