தமிழர் பகுதியொன்றில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது
போதை மாத்திரைகளுடன் திருநாவற்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட்ட நான்கு இளைஞர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன.

போதை மாத்திரைகள்
அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, கத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுதது குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.