சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாத முன்னாள் ஜனாதிபதிகள்!
இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், அவர்கள் இன்று சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரது பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே இம்முறை சுதந்திர தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் பங்குபற்றாத நிகழ்வாக அமைந்துள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்த அழைப்பினை நிராகரித்துள்ளார்.
இதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.