முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொடவுக்கு முக்கிய பதவி?
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனுடன், இணைய ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே நேற்று முன் தினம் கொரோனா தொற்றுஏற்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், அவரது வெற்றிடத்துக்கே முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.