முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (05) நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்கலின் பின்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் , அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்
அதேவேளை கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.