இலங்கையை எச்சரித்த சர்வதேச புலனாய்வு அமைப்புகள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கிறார் என காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு குறித்த குழுவினர் நவம்பர் 27 ஆம் திகதியன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த காணொளியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக விடுதலைப் புலிகள் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாவும் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நெடியவன் என்கிற பேரிம்பநாயகம், நோர்வேயிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் புலனாய்வு அமைப்புகள் அந்த முயற்சிகளை முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.