அம்மி மிதித்து... அருந்ததிபார்த்து....பலரையும் வியப்பில் ஆழ்த்திய வெள்ளைக்கார தம்பதிகள்!
எமது கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், அதற்கு உயிர்கொடுக்கும் விதமாக வெள்ளைக்கார ஜோடிகள், அம்மி மிதித்து... அருந்ததிபார்த்து இந்துமுறைப்படி திருமண செய்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, கோமாதாவை வணங்கி, அக்னி சாட்சியாக, மந்திரங்கள் முழங்க சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து இந்து தமிழர் பாரம்பரிய முறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிகள்.
அதைவிடவும் தங்கள் கைகளாலே அவர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு உணவும் பரிமாறியதுடன், திருமணத்தில் கல்லந்துகொண்ட அனைவருமே கீழே அமர்ந்திருந்து உணவருந்தியமை நம்மவர்கள் பல்லரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த தம்பதிகளுக்கு பலரும் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறிவரும் நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எனினும் இத்திருமணம் எங்கு எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பிலான தகவல் வெளியாகவில்லை.