மன்னாரில் விபத்துக்குள்ளான வாகனம்: சாரதி வைத்தியசாலையில் அனுமதி!
மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றிவந்த மஹேந்திரா ரக வாகனம் வீதி அருகில் காணப்பட்ட போக்கில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (19-10-2023) மதியமளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயணித்த மஹேந்திரா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பல்லத்தினுள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
வாகனத்திலிருந்த பல ஆயிரக்கனக்கான கிலோ மீன்கள் வீதியில் தூக்கி விசப்பட்ட நிலையில் படுகாயங்களுக்கு உள்ளான வாகன சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.