நிதி நிறுவன உரிமையாளர் கடத்தல்; பிக்கு கைது!
கொழும்பு தெமட்டகொடை டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் நிதி நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்ட சந்தேகத்தில் பிக்கு ஒருவர் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விரிவான விசாரணை
அதோடு இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரைக் கைது செய்ய தெமட்டகொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்துக்குச் சொந்தமான கெப் வண்டியொன்று நிதி நிறுவன உரிமையாளரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதேசமயம் கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் கொழும்பு ரோயல் கார்டனுக்கு அருகில் விடப்பட்டிருந்த நிலையில் தெமட்டகொடை பொலிஸாரிடம் உரிமையாளர் முறைப்பாடு செய்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..