பரபரப்பான இறுதி போட்டி: 4வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை!
கொல்கத்தா அணியை 27 ஓட்டங்கள் வித்திசத்தில் தோற்கடித்து 2021 ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை அணி கைப்பற்றியது.
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று இடம்பெற்றது. இதில் சென்னை அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியனர்.
கொல்கத்தா அணி நாணயச்சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 192 ஓட்டங்களை குவித்திருந்தது.
சென்னை அணி சார்பில் தொடங்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட் மற்றும் டூ பிளெசிஸ் இணைந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் கொய்வாட் 32 ஓட்டங்களில் சுனில் நரேன் சூழலில் ஆட்டமிழந்துள்ளார்.
இதையடுத்து உத்தப்பா 31 ஓட்டங்களையில் ஆட்டமிழந்தனர். பின்னர் மொயீன் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டூ பிளெசிஸ் 86 ஓட்டங்களை குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆடிகொண்டிருந்த ஷுப்மான் கில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது.
சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், வீழ்த்தியுள்ளனர்.