நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிராக மனு தாக்கல்
நீதிமன்ற உத்தரவை மீறி ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தாக்குதல்களை நடத்துமாறு உத்தரவிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக, சட்டத்தையும் நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டின் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த் தாக்குதல்கள்
போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் மத்துமபண்டார குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட அரசியல் செய்யும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளதாவும் அவர் கூறினார்.
மேலும் கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.