பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது.
மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆலய உற்சவம் ஆரம்பமானது. இவ் உற்சவத்தில் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் செல்லும் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பின்பு வியாழக்கிழமை 9 ஆம் திகதியன்று, அருச்சுனன் தவநிலை செல்லல் நிகழ்வு இடம்பெற்றது.
இதை தொடர்ந்து பாண்டவர்கள், திரெளபதை , கிருஷ்ணர் தேவாதிகள் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெற்றது.
இறுதியாக இன்றைய தினம் சனிக்கிழமை தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயம் சடங்குடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.