மட்டக்களப்பு மகள் மீது தந்தை பாலியல் சேட்டை; தாயார் முறைப்பாடு
மட்டக்களப்பு - கொக்குவில் பிரதேசத்தில் 17 வயதுடைய மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த 58 வயதுடைய தந்தையை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) உத்தரவிட்டார்.
தனது மகள் மீது கணவன் பாலியல் சேட்டை புரிந்துள்ளதாக தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவதினமான நேற்று சந்தேகநபரை கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். கைதான 58 வயதுடையவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்