யாழில் கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 20 வயது இளைஞன்
யாழ். சாகவச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரியில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற வாகனமொன்றை அதே திசையில் சென்ற உந்துருளி ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முந்திச் செல்ல முற்பட்ட உந்துருளி எதிர்த் திசையில் யாழில் இருந்து சாகவச்சேரி நோக்கிச் சென்ற இளைஞர் ஒருவர் செலுத்திய உந்துருளியுடன் மோதியதில் இளைஞர் அருகில் பயணித்த வாகனத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சாகவச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.