யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
மாவடிவேம்பைச் சேர்ந்த (62) வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான மா.சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (14) வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற தமது மாடுகளை கூட்டி வரும்போது இருள் சூழ்ந்து காணப்பட்டதனால் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
இவரது அழுகுரல் சத்தம் கேட்டு வாடியில் நின்ற மனைவி கணவரை யானையின் தாக்குதலில் இருந்து காப்பற்ற ஓடியபோதும் முயற்சி பலனின்றிபோயுள்ளது.
இன்று (15) உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளை மேற்கொண்ட கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்தன் உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்று சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.