பிரபல பெண் தொழிலதிபர் அதிரடியாக கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலவி வந்த 700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இல. 9 இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற பதிவுகள் (வழக்கு இல. 495/08/20), கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் ஸ்ரீ லங்கா ஷிப்பிங் ஆகியவற்றின் தொழிலதிபரும் பணிப்பாளருமான நாணயக்கார, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக வரி செலுத்தத் தவறிவிட்டார் என்று கூறுகிறது.
பிடியாணை
பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் புறக்கணித்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது, இதன் விளைவாக மூன்று நீதிமன்ற அழைப்பாணைகள் மற்றும் அவரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், நாணயக்கார குறைந்தது நான்கு முறை வெளிநாடு சென்றதாகக் கூறப்படுகிறது, இது அமலாக்கத் தோல்விகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.
அமலாக்கத்தில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நீதவான், பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்தார்.
எஸ்எஸ்பி ஷானி அபேசேகர தலைமையிலான சிறப்பு நடவடிக்கையின் மூலம் நாரஹேன்பிட்டவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் பின் கதவு வழியாக தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் ஏற்கனவே வளாகத்தைச் சுற்றி வளைத்திருந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.