யாழில் குடும்பஸ்தர் மீது காவாலிக் குழு கொலை வெறி தாக்குதல்; பின்னனியில் புலம்பெயர் தமிழர்
யாழ்ப்பாணம் குடத்தனையில் குடும்பஸ்தர் ஒருவரை ரவுடிகள் வழி மறித்துத் தாக்க்கிய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலின் பின்னனியில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவமானது யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக் தெரியவருகின்றது.
, குறித்த பகுதியில் உள்ள கோயிலுக்கு காரில் சென்ற குடும்பஸ்தரை வீதியின் குறுக்கே மரங்கள், கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தி காட்டுப்பகுதியில் வழிமறித்து கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குடும்பஸ்தரைத் தாக்கியவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதும் உடனடியாக அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரியவருகின்றது.