நண்பர்களுடன் நீராடச் சென்ற போது நேர்ந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
புத்தளத்தில் தனது நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் (14-04-2024) மாலை புத்தளம் - மீ ஓயா ஆறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் புத்தளம், எருக்கலம்பிட்டி (நாகவில்லு) பகுதியைச் சேர்ந்த அபுல் ஹூதா முஹம்மது அப்சிர் எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா நிமித்தம் தனது நண்பர்களுடன் மீ ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்த நண்பர்கள் குறித்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், உயிரிழந்த நபரின் ஜனாஸா மீதான மரண விசாரணையை நடத்தினார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.