பொய் பரப்புரை.... இந்தியாவா?
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக சிலர் செய்திகளை பரப்ப தொடங்கியுள்ளனர்.
எனினும் அப்படி ஒரு கதையை மைத்ரி சொல்லவே இல்லை என்பதே உண்மை என கூறப்படுகின்றது.. இது குறித்து சஜின்வாசின் வீட்டில் வைத்து , இம்மாதம் 6ம் திகதி , பேச்சு வாக்கில் அங்கிருந்த ஊடகவியளாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் துருவி , துருவிக் கேட்டும் , குடும்பத்தினரது பாதுகாப்பு காரணமாக சொல்ல முடியாது என மைத்திரி கூறிவிட்டாராம். அதுமட்டுமல்லாது இது குறித்து இந்திய தூதுவர் உடனும் , மைத்ரி ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.