வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம்

Sri Lanka Police Puttalam Murder
By Shankar Aug 18, 2024 05:24 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளம் மாவட்டம், வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால் - சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு நேற்றையதினம் (18-08-2024) உயிரிழந்துள்ளார்.

வாக்களிக்கக் கோரி வருவோரை தாக்குவோம்... விளம்பரப்படுத்திய கிராம மக்கள்!

வாக்களிக்கக் கோரி வருவோரை தாக்குவோம்... விளம்பரப்படுத்திய கிராம மக்கள்!

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife

உயிரிழந்த குறித்த பெண் கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து 3 நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife

இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்... தவறான சத்திர சிகிச்சை தான் காரணமா?

கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்... தவறான சத்திர சிகிச்சை தான் காரணமா?

வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் - மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன் தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபரொருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife

மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது 4 பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால் 4 பிள்ளகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.

விமான நிறுவன பெண் ஊழியர் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த நபர்... அதிர்ச்சி சம்பவம்

விமான நிறுவன பெண் ஊழியர் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த நபர்... அதிர்ச்சி சம்பவம்

இதனையடுத்து, கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife

தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife  

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!

தனது 4 பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் 3 நாட்களின் பின்னர் நேற்று (17) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம் | Fake Relationship With Someone Husband Killed Wife

இதனை வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US