வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி ; 30 ஆண்டுகளுக்குப் பிறகு பின் கண்டுபிடிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Kuwait
By Sahana Jul 26, 2025 09:48 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கைப் பெண் ஒருவர், குவைட் நாட்டவரொருவரை ஏமாற்றி, போலியான கர்ப்பம் ஊடாக சட்டவிரோதமாக அந்த நாட்டின் குடியுரிமை பெற்று மோசடி செய்ததை சுமார் 30 வருடங்களின் பின்னர் குவைட் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதி மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி

மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதி மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி

கொஸ்தா எனப்படும் குறித்த பெண், 1992 ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர் விசாவில் முதன்முதலில் குவைட்டுக்கு சென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், குற்றச்சாட்டொன்றில் அவர் நாடு கடத்தப்பட்டார்.

இருப்பினும், 1996 ஆம் ஆண்டில், அவர் ஒரு புதிய பெயர் மற்றும் கடவுச்சீட்டின் கீழ் மீண்டும் குவைட் நுழைந்துள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி ; 30 ஆண்டுகளுக்குப் பிறகு பின் கண்டுபிடிப்பு | Fake Pregnancy Citizenship Srilanka Girl Scam 30

அவர் அங்குச் சென்ற சிறிது நாட்களிலேயே குவைட் நாட்டவரான டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை மணந்துள்ளார்.

இந்தநிலையில், குவைட் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ், வெளிநாட்டுப் பெண் ஒருவர் குவைட் ஆணைத் திருமணம் செய்து, அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, குறித்த பெண் தமது கணவரை, தாம் கர்ப்பமாக இருப்பதாக நம்ப வைத்துள்ளார்.

இந்தநிலையில் உண்மையிலேயே கர்ப்பம் தரித்திருந்த மற்றுமொரு இலங்கை பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி, தமது பெயர் மற்றும் அடையாளத்தை பயன்படுத்தி வைத்தியசாலையில் குழந்தையை பிரசவிக்க வழிசெய்துள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையை, கொஸ்தா என்ற குறித்த பெண், அவரது குவைட் கணவரின் மகள் என்று பதிவுசெய்துள்ளார். அதனூடாக 2000 ஆம் ஆண்டில், அந்த பெண் குவைட் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார்.

வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி ; 30 ஆண்டுகளுக்குப் பிறகு பின் கண்டுபிடிப்பு | Fake Pregnancy Citizenship Srilanka Girl Scam 30

அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அவர் அதிகாரப்பூர்வமாக குவைட் பிரஜையானார்.

இந்தநிலையில், 2008 ஆம் ஆண்டில், கொஸ்தா தமது கணவரை விவாகரத்து செய்ததுடன், தமக்கு பிறந்த குழந்தை அவருடையது அல்ல என்று ஒப்புக்கொண்டார்.

இது குறித்து விவாகரத்தான அவரது கணவர் அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், அந்த நேரத்தில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டிலேயே அவர் முறையாக வழக்கு தாக்கல் செய்தார். இது அந்த நாட்டின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு வழிவகுத்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், மரபணு சோதனையில் குறித்த குழந்தை கொஸ்தாவுடனோ அல்லது அவரது முன்னாள் கணவருடனோ உயிரியல் ரீதியாக தொடர்புடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

யாழ். செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 101 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ். செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 101 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டில், குடியுரிமை விவகாரங்களுக்கான உயரிய குழு, ஏமாற்றுதல், போலி தகவல் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் குவைட் குடியுரிமையை மோசடியாகப் பெற்றமை தொடர்பில் கொஸ்தா என்ற குறித்த பெண் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

அதற்கமைய, அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதுடன், தற்போது வயது வந்த அவரது மகளின் குடியுரிமையும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, அதிகாரிகள் குறித்த மகளின் உண்மையான தாயை இலங்கைப் பெண் என்று அடையாளம் கண்டதுடன், அவர் பிரசவத்தின் போது குவைத்தில் இருந்த போதிலும் பின்னர் நாடு கடத்தப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது, கடந்த காலங்களில் குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை குவைட் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

கிருஷாந்தி கொலை வழக்கு ; குற்றவாளியின் வாக்கு மூலத்தால் மக்கள் போராட்டம்

கிருஷாந்தி கொலை வழக்கு ; குற்றவாளியின் வாக்கு மூலத்தால் மக்கள் போராட்டம்

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US