தொலைபேசியில் அச்சுறுத்தல் ;நகை அடவு வைத்து பணம் செலுத்திய பெண்; கணவன் திகைப்பு!

Trincomalee Crime Women Ishara sewwandi
By Sulokshi Jan 07, 2026 02:30 PM GMT
Report

    கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்தி பெரயை பயன்படுத்தி தொலைபேசியின் ஊடாக நூதனமான முறையில் அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனம் தெரியாத சிலர் தொலைபேசியின் ஊடாக தங்களை வங்கி ஊழியர்கள் எனவும், பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எனவும் அச்சுறுத்தி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தொலைபேசியில் அச்சுறுத்தல் ;நகை அடவு வைத்து பணம் செலுத்திய பெண்; கணவன் திகைப்பு! | Extortion Using The Name Ishara Sewwandi

திருகோணமலை – அன்புவழி புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொலைபேசிக்கு திங்கட்கிழமை பிற்பகல் 2.40 மணி அளவில் அழைப்பை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.

மர்ம நபர்கள் அச்சுறுத்தல்

தங்களை தனியார் வங்கியின் ஊழியர்கள் என தெரிவித்து உங்களுடைய அடையாள அட்டை தொலைந்திருக்கிறதா என கேட்டுள்ளனர். உங்களுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் 6 இலட்சம் ரூபாய் கடன் பெறபட்டுள்ளதாகவும், அவர்கள் பாதாள உலக கோஷ்டியான செவ்வந்தியுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் உங்களை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாகவும் பொலிஸாருடன் கதையுங்கள் எனவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் பொலிஸார் போன்று சிலர் கதைத்து அச்சுறுத்தியுள்ளனர்.

ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியை துண்டிக்க விடாமல் உடனடியாக பணத்தை செலுத்துமாறும், இதை யாரிடம் தெரிவித்தால் உங்களுக்குத்தான் ஆபத்து எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த குறித்த பெண் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நகைகளை அடகு வைத்து அவர்கள் வழங்கிய மக்கள் வங்கி இலக்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயை வைப்பிலிட்டுள்ளார்.

பின்னர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் வரவே வேலையைவிட்டு வந்த கணவனிடம் குறித்த விடயம் தொடர்பாக கூறியுள்ளார். மர்ம நபர்களுடன் கணவன் கதைத்தபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளார்கள்.

கணவனுக்கு தெரியவந்த  உண்மை

குறித்த மர்ம நபர்கள் எப்.சி.ஐ.டி யின் இன்ஸ்பெக்டர் பாலசூரிய மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜரத்னம் ஆகியோரின் பெயர்களில் கதைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் செவ்வாய்க்கிழமை (06) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அவர்களுடைய வங்கி கணக்கு விபரங்கள்,தொடர்பு கொண்ட கொழும்பு தொலைபேசி இலக்கங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொடர்ச்சியாக அவர்கள் அழைப்பை எடுத்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வங்கி கணக்கை ஆராய்ந்தபோது அதற்கு 50,000,100,000 என ஒரு நாளைக்கு 5 இலட்சம் தொடக்கம் 1 மில்லியன் வரை வைப்பிலிடப்பட்டு வருவதோடு அது இன்னொரு கணக்கிற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

அத்துடன் குறித்த கணக்கானது மூன்று மாதங்களுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபருடைய பெயரில் இக் கணக்கு இருப்பதாகவும் அந்த  தகவல்கள் மேலும்  தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US