மிதிபலகைகளில் பயணிக்கும் வெளிநாட்டவர்கள்; விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
மலையக பிரதான ரயில் பாதையில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மிதிபலகைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் இதனால் , அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடரும் விபத்துக்கள்
சமீபத்திய சம்பவத்தில், ஒஹியா ரயில் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (21) பொடி மினிகே எக்ஸ்பிரஸில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார்.
அதேசமயம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த அபாயகரமான பயணத்தை சுற்றுலா பயணிகள் மேற்கொள்வதை தடுக்க புகையிரத காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.