முறைப்பாட்டினை தமிழ்மொழியில் மேற்கொள்ள அவசர இலக்கம் அறிமுகம்!
முறைப்பாட்டினை தமிழ்மொழியில் மேற்கொள்ள 107 என்ற அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளையதினம் (16-02-2024) முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களாலும் அவசர இலக்கம் தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகாக பயிற்சி அளிக்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் சந்திப்புக்கு நாளையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்கள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
வன்னி பிரதி பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இருக்கும் போது 2016 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள என புதிய இலக்கத்தினை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.