அவசர நோயாளர் காவு வண்டி தாதியின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!
அவசர நோயாளர் காவு வண்டி சேவையில் அழைத்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் தங்கச்சங்கிலி திருடப்பட்ட விவகாரத்தில், தாதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் கடமையிலிருந்த 29 வயதான தாதியொருவரே கைதானார்.
நுகேகொடவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியொருவரின் 73 வயதான மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர நோயாளர் காவு வண்டியின் சேவை பெறப்பட்டது.
இதன்போது வைத்தியசாலைக்கு செல்வதற்காக ஆடை மாற்றுகையில் மூதாட்டியின் தங்க நகை களவாடப்பட்டிருந்தது. சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியே இவ்வாறு காணாமல் போயிருந்தது.
இது குறித்து மூதாட்டியின் கணவரால் மீரிஹான பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில் தாதி கைது செய்யப்பட்டதுடன், களவாடப்பட்ட சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.