எல்ல விபத்து ; இராணுவ வீரர் கௌரவிப்பு
எல்லா-வெல்லவாய பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது.
விபத்து நடந்த நேரத்தில், கவிழ்ந்த பேருந்தில் முதலில் ஏறி காயமடைந்தவர்களை மீட்டவர் இராணுவ விசேட அதிரடிப் படையின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டார ஆவார்.
தங்காலை நகர சபை ஊழியர்கள்
இந்தப் பாராட்டு நிகழ்ச்சி வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் இராணுவ வீரரின் தாயார், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி மற்றும் வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ. நிஹால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இராணுவ வீரருக்கு நினைவுச் சின்னமும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன. தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
இதன்போது, பேருந்தில் இருந்த குழுவை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், அவர்களில் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டாராவும் அடங்குவார். அவர் இப்போது ஓரளவு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
எல்லா-வெல்லவாய பேருந்து விபத்தில் 16 பேரின் உயிரிழந்ததுடன் சுமார் 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.