அம்பாறை மாவட்டத்திலுள்ள புதிய புற்களை தேடி படையெடுக்கும் யானை கூட்டம்
புதிய புற்களை தேடி நூற்றிற்கும் மேற்பட்ட யானை கூட்டம் வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக அம்பாறை மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து இன்று (28) யானைகூட்டங்கள் வருகை தந்துள்ளன.
இதன்போது, குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடியும் திரிந்துள்ளன.
இவ்வாறு பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என நூற்றிற்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன.
தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
உடமைகள் சேதம் மேலும், இப்பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் முப்பதிற்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருகின்றன.