நம்பிக்கையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன!
நாட்டில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைய அனைத்து பாடசாலைகளும் விரைவில் திறக்கப்படும் பாடசாலை கல்வி செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை(25) அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (21) கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலைகளை மீள திறப்பதற்கும், பாடசாலை கல்வி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் கல்வி பணிப்பாளர்கள், கல்வி சேவை அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், சுகாதார தரப்பினர் , கிராமசேவகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.