உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; நீதிமன்றுக்கு சமர்ப்பித்த புகைப்படங்களால் பெரும் சிக்கலில் கோட்டபாய

Gotabaya Rajapaksa Sri Lankan Peoples Easter Attack Sri Lanka High Court of Sri Lanka
By Vironika Jun 25, 2026 01:30 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு நேற்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; நீதிமன்றுக்கு சமர்ப்பித்த புகைப்படங்களால் பெரும் சிக்கலில் கோட்டபாய | Easter Attack Photos Put Gotabaya In Legal Trouble

 நீதிமன்றில் புகைப்படங்கள் 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கடமையில் தவறியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரித்த ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்றும் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஸஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து 2017 ஆம் ஆண்டிலிருந்தே புலனாய்வு அமைப்புகள் அறிந்திருந்தன என்றும், ஸஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் ஒரு விசாரணைக் கோப்பை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பித்திருந்தது என்றும், ஆனால் இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்

காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்

பொறுப்பற்ற முறையில் செயல்பட்டவர்கள் தற்போது கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யத் தயாராகி வருவதாக சாடிய ஜனாதிபதி சட்டத்தரணி , அமெரிக்காவின் FBI-யும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஒரு விசாரணையை நடத்தியது, மேலும் அந்த விசாரணையின் ஒரு பகுதியாக 33 பேர் நாட்டிற்கு வந்ததாக தெரிவித்தார்.

எதிர்மனுதாரர்களால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அஸாத் மௌலானாவின் வாக்குமூலப் பிரதியுடன் சில படங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) ஆகியோருடன் கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, அந்தப் படங்கள் அரசியல் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டவை என்றார்.

காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்

காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இவ்வாறான படங்களை எடுப்பது சாதாரணமான ஒன்று எனவும், அதன் மூலம் மனுதாரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் முற்றிலும் பழிவாங்கும் நோக்கோடும், தீயநோக்கத்துடனுமே இந்தப் படங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி வாழும் அஸாத் மௌலானா, பிரித்தானியாவின் 'செனல் 4' (Channel 4) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் மூலம் இலங்கையின் நீதித்துறை சிதைந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தகாத படம் பார்த்து 9 மாத குழந்தையை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ; மது போதையில் சம்பவம்

தகாத படம் பார்த்து 9 மாத குழந்தையை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ; மது போதையில் சம்பவம்

லசந்த விக்ரமத்துங்கவின் கொலை, கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு ராஜபக்ச குடும்பத்தின் மீது பழி சுமத்த இந்த நபர் முயன்றுள்ளார் என்றும், அத்தகைய நபர் கூறிய கூற்றுகளின் அடிப்படையில் தனது கட்சிக்காரரை எவ்வாறு கைது செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

பிள்ளையனின் கட்சி பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ஆசாத் மௌலானா கூறியிருந்தபோதிலும், அவர் பிள்ளையனின் செயலாளராகவே செயல்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது. 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US