இலங்கையிலும் நில அதிர்வு!
வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தின் புத்தளை, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் இன்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை துருக்கி , மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்
புத்தல வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு அருகில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.
அதன்படி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அதிர்வு உணரப்பட்டதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைந்துள்ள நான்கு நிலநடுக்க மையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கம் தொடர்பாக மேலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.